இசைத் தமிழுக்கு இதய காணிக்கை
இயற்றிடுவேன் புதுக்கவிதை பல
கவிதைக்குப் பண் அமைப்போம்
அதை தாளமுடன் பாடிடவே.
கேட்பவர்கள் உருகிடவே - அதை
இனிமையுடன் இசைத்திடுவோம்
தமிழிசையின் இயல்பதென -பிறர்
பிறர் மொழிந்திடவே வாழ்ந்திடுவோம் .
இயலுடனே இசை வளர்த்த தமிழினமே
இன்றுன் இசைத்தமிழின் நிலையென்ன
தமிழிசைக்கு குரல்கொடுக்க வேறு பலர்
வந்த நிலை அவலநிலையில்லையன்றோ.
தொன்மையுள்ள தமிழிசைக்கு
தரணியில் நிகர் எதுவுமில்லை
தன்மானம் குறையாமல் - அது
தழைத்தோங்க பாடுபடு.
7.2.1980
அன்னையின் ஆதரவுக்கு...
அம்மா பாவத்தால் என் ஆன்மா
அழிந்து விடுமென் றஞ்சுகிறேன்
தாபம் நிறைந்தே நான் உன்னை
அண்டி வருகிறேன் ஆதரி நீ .
நேசத்தாயே இறைமகனை
எமக்கு ஈன்று தந்தாயே
வேந்தனை ஈன்று தந்தமையால்
மாந்தரின் மாதா ஆனாயே .
மதுரமும் சாந்தமும் நிறைந்தவளே
மானிடர் எம்மை ஏற்றருளே
கிருபை தயாபம் உடையவளே
கிறிஸ்துவோடேம்மை சேர்த்தருளே .
['கடவுளின் பிரதிநிதி ' மாத இதழில் பிரசித்தம் செய்தது No.260, September 1977]
No comments:
Post a Comment